அல்லாவின் வழியில் அரசாங்கம்
[rockyou id=105310921&w=426&h=319]
ஆரம்பிக்கிறது வன்முறை
ஒரு நாலைந்து முஸ்லீம்கள் பிரச்சினையிலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
வந்தார் காவலாளி முரளி
ACP முரளி மிகுந்த கோபத்தோடு அங்கிருந்த பெண் தன்னார்வலரை “தீவிரவாதி” என்று திட்டுகிறார். வெள்ளைக்கார நாய்க்குத் துணையாக வேலை செய்கிறீர்களா என்று மிரட்டுகிறார்.
(ஃப்ரான்ஷ்வா கத்தியேவை ஒரு வெள்ளைக்கார நாய் என்று திட்டுவது இனவெறுப்பை வெளிப்படுத்தும் வசவுச் சொல்.)
காவல்காரர் முரளி பெண் தன்னார்வலரிடம் கேவலமாகப் பேசுகிறார்.
திபு திபுவென நுழைந்தது போலீஸ்
போலீஸார் கலவரம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக லலித் கலா அகடமிக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்.
காவலாளி முரளி கலாட்டா செய்கிறார்
தன்னார்வலர்களின் கெஞ்சுதல்களையும் மீறி கண்காட்சிப் படங்களை எடுத்து எறியும் காவல்காரர் முரளி
கட்டளையை நிறைவேற்றும் மற்ற காவலாளிகள்
தங்கள் மேலதிகாரியின் உத்தரவின்படி படங்களை சுவரில் இருந்து பிடுங்கும் ஏனைய காவலர்கள். (இதில் பல ஆதாரபூர்வமான படங்கள் சேதமடைந்தன.)
கண்காட்சிப் படங்களை தூக்கிக்கொண்டு செல்லும் மற்றொரு காவலாளி.
உலக மகளிர் தினத்தன்று பெண்மைக்கு அவமானம்
கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது முதிர்ந்த பெண்மணியையும், ஒரு இளம் பெண் தன்னார்வலரையும் இரவு 7 மணிக்கு மேல் கைது செய்து, காவல் நிலையத்திற்கு போலீஸ்காரர்கள் கூட்டிச்சென்றார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் காவல் நிலையத்தின் பக்கம்கூட சென்றிராதவர்கள். இந்தியாவில் ஹிந்துக்களாக இருப்பதற்கு இதுதான் தண்டனை போலும்.
முதிர்ந்த பெண்மணியை இரவு 7 மணிக்குமேல் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீஸ்.
பிணங்கள் அரசாண்டால், சிதையில் எரியும் சட்டங்கள்
இரவு 7 மணிக்குமேல் எந்தப் பெண்ணையும் கைது செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், காவலாளி முரளி இந்த இரண்டு பெண்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு, அவர்களை மிரட்டி விசாரணைக்காகத்தான் அழைத்துவரப்பட்டோம் என்று கையெழுத்து வாங்கியுள்ளார். அதுவும் அவருடைய உயர் அதிகாரியின் தலையீட்டின் காரணமாக.
மேலும், பெண்களை விசாரிக்கவேண்டும் எனில் பெண் போலீஸார் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் சட்டம். இங்கே இருந்தது ஆண் போலீஸார் மட்டுமே.
இந்த இரண்டு பெண்மணிகளையும் காவல்துறை கைது செய்துள்ளதை தமிழ்நாட்டில் உள்ள பெண்விடுதலை அமைப்புக்கள், பத்திரிக்கைகள் கண்டிக்குமா?
இரண்டு பெண்மணிகளையும் கைது செய்து அழைத்துக்கொண்டு செல்லும் போலீஸ்.
Good Pic…Not to happen again after seeing this information.Need to take some resolution on this immediately whoever see this information.
By
Bals…
இந்த அராஜகத்தின் சொரூபத்தை தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் காணமுடிவதில்லை. இது கருநாநிதியின் சமிக்ஞையில்லாது, ஒப்புதல் இல்லாது நடந்திருக்கும் என நான் நம்பவில்லை. எழுதப்பட்ட சரித்திரத்தை அழிக்க ஒரு சில முஸ்லீம்கள் போதும் என்று தோன்றுகிறது. அவர்கள் கூச்சலுக்கு தமிழ காவல் துறையும், காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருநாநிதியும் உடன் பணிவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தான் தன் நல்லாட்சி என்றும் பொற்காலம் என்றும் கருநாநிதி பெருமைப் பட்டுக்கொள்கிறார். நடப்பது ஆட்சி அல்ல். ரவுடித்தனம். = வெ.சா.
Pingback: உள்ளங்கை » Blog Archive » மறைக்கப்படும் உண்மைகள்